
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எத்தனை ஏவல் அமைப்புகளை கூட்டி வந்தாலும் கண்டிப்பாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் தேர்தலில் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும் என்றும் டெல்லிக்கு எப்பவுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று கூறினார்.
அதன்பிறகு பாஜகவுக்கு துணை போகும் இன மானம் இல்லாத அடிமைகளுக்கு சவால் விடுகிறேன் கண்டிப்பாக தேர்தல், நாங்கள் தான் ஜெயிப்போம் என்ற முதல்வர் ஸ்டாலின் சவால் விட்டிருந்தார்.
இதற்கு தற்போது தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தமிழக மக்களின் அவுட் ஆப் கண்ட்ரோலாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்த பிறகு பதற்றத்துடன் இருக்கிறார். மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு அடிபணிந்து தான் திமுக இருந்தது.
ஊழலுக்கு ஒருமுறை மற்றும் தேச விரோதமாக செயல்பட்டதற்கு ஒருமுறை என இருமுறை திமுக அரசு கலைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டிப்பாக கண்டிப்பாக மக்கள் தி.மு.கவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார்.