இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் நிலையில் இது மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து தென் தமிழக பகுதிகளில் தாழ்வு பகுதியாக நிலவுக்கூடும் என்பதால் இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு நாளை வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இந்நிலையில் இன்று தமிழகம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி அதே மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று நாளை கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வருகிற 18-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது..