தமிழகத்தில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 19 ஆம் தேதிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பொங்கல் பண்டிகையில் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது மக்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.