வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாகும். நமது நாட்டில் விளையும் வாழைப் பழங்கள் சராசரி உயரம் கொண்டவை ஆகும். ஆனால் பப்புவா நியூகினியா நாட்டில் விளையும் வாழைப்பழங்கள் தான் உலகிலேயே பெரிய பழமாகும். இந்த பழங்களை விளைவிக்கும் மரங்களை  “Musa Ingens” என அழைக்கிறார்கள். இந்த மரங்கள் 15 முதல் 30 மீட்டர் வரை உயரம் உ டையது.

இந்த வாழை மரங்களை வீட்டில் வளர்க்க பலர் முயற்சி செய்துள்ளனர். எனினும் அது பயனற்றதாய் சென்று விட்டது. ஏனெனில் இந்த மரங்கள் வெப்ப மண்டலத்தில் தாழ்வான நிலத்தில் வளராது. இந்த மரங்கள் மேட்டுப் பகுதியில் அதுவும் பகலில் குளிர்ச்சியான, இரவில் ஈரமான மற்றும் சூடான மிதமான காலநிலை இருந்தால் மட்டுமே வளரும். இதன் காரணமாகதான் இந்த வாழை மரங்கள் பப்புவா நியூகினி நாட்டில் மட்டும் அதிகம் விளைகிறது.