கன்னட சினிமாவில் பிரபல நடிகரான தர்ஷன் அவருடைய மனைவி பவித்ரா இருவரும் கொலை வழக்கில் சிக்கிய நிலையில் போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சித்திரதுர்காவை சேர்ந்த ரேணுகா சாமி என்ற நபர் பவித்ராவிற்கு ஆபாச குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா கூலிப்படையை ஏவி அவரை பெங்களூருக்கு வரவழைத்து கடுமையாக அடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் பவித்ராவின் கணவர் தர்ஷனும் அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் ரேணுகாசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.