ஐபிஎல் சீசனில் ஆர்பிசி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லியை, குஜராத் அணி வீழ்த்தியது. இதன் மூலம் குஜராத், ஆர் பி சி, பஞ்சாப் அணி ஆகிய மூன்றும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஆர் பி சி அணியில் லுங்கி நிகிடி இடம்பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி வருகிறது ஜூன் 11ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதனால் லுங்கி நிகிடி பிளே ஆப் சுற்றில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த முசாரபானியை தேர்வு செய்ய உள்ளதாக ஆர் பி சி உறுதி செய்துள்ளது. பிளே ஆப் சுற்றிற்காக மட்டும் தற்காலிகமாக 75 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் செய்துள்ளது. முசாரபானி 70 டி20 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இவர் ஜிம்பாப்வே அணிக்கான 12 டெஸ்ட் போட்டி மற்றும் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஜிம்பாப்வே அணி இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாட உள்ளது. இந்த போட்டி வருகிற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் ஆர் சி பி அணியில் இணைய உள்ளார்.