திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிலியாண்டபுரத்தில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குமாரி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சுபாஷ் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். இதுகுறித்து குமாரி கேட்டபோது சுபாஷ் சரியாக பதிலளிக்கவில்லை.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மன உளைச்சலில் சுபாஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுபாஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.