
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டம் பாக்ஜோபா கிராமத்தில் செந்தோதேவி(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் டிராக்டர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் தேவி தனது கணவரிடம் தசரா பண்டிகையை முன்னிட்டு புதிய சேலை வாங்கி தருமாறு கூறியுள்ளார்.
ஆனால் தேவியின் கணவரால் சேலை வாங்கி கொடுக்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தேவி நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.