தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சூர்யா- ஜோதிகா. இருவரும் இணைந்து 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். படங்களில் நடிக்கும் போது காதலிக்க தொடங்கிய சூர்யா- ஜோதிகா பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு விருது வழங்கும் விழாவில் ஜெய் பீம் திரைப்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்தது. இதில் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

அப்போது மேடையில் விருதை பெற்றுக் கொண்ட நடிகர் சூர்யா மனைவி ஜோதிகா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த விருதை நான் ஜோதிகாவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். எனக்காக அவர் பல தியாகங்களை செய்துள்ளார். குழந்தைகளை அவர் கவனித்துக் கொண்டு என்னை நடிக்க வைத்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக ஜோதிகா இருக்கிறார். என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் அனைத்திலும் ஜோதிகா ஒரு பகுதியாகவே இருக்கிறார் என சூர்யா கூறியுள்ளார். மேலும் நடிகை சூர்யா பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.