தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் கடந்த 2019 விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து அவர் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

கடைசியாக தமிழ் சினிமாவில் காத்து வாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்குப் பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். திரை உலகில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக வெற்றிகரமாக கடந்துவிட்ட நடிகை சமந்தா தற்போது படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார்.

பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறார். அதே சமயம் எங்கு சென்றாலும் தனது உடற்பயிற்சியை மட்டும் நாள்தோறும் தொடர்ந்து செய்து வருகிறார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் ஏதோ நோய் வாய்ப்பட்டவர் போல ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது சமந்தா தான் புல் அப்ஸ் எடுக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இங்கே பாருங்கள் ஒரு சவால், நான் இப்போது செய்வதை ஆரம்பத்தில் இதைப் போன்று 3 முறை செய்யுங்கள்.

அப்படி செய்ய முடியாவிட்டால் என்னை ஒல்லியானவள் நோய் வாய்ப்பட்டது போல இருக்கிறீர்கள் என்று யாரும் கூறக்கூடாது. ஒருவேளை உங்களால் முடியாவிட்டால் நீங்கள் சொன்னீர்களே அது அந்த வார்த்தை தான் உங்களுக்கு என்று கூறியுள்ளார்.