
இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் ‘பேட் கேர்ள்’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் வர்ஷா பரத் என்பவர் ஆவர். இவர் விசாரணை மற்றும் வடசென்னை போன்ற படங்களில் வெற்றிமாறனுடன் பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர் அமித் திரிவேதி. இந்த படம் ஒரு இளம் பெண்ணின் வளர்ந்து வரும் சூழல் அவர்களுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் ஆகியவற்றை கொண்டு அவள் இந்த உலகை எப்படி பார்க்கிறார் ,அனுபவிக்கிறார் என்பதை பற்றிய படமாகும். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசரை பகிர்ந்த இயக்குனர் பா.ரஞ்சித் கூறியதாவது, இந்த படத்தை பார்த்தேன்.
மிகவும் தைரியமான புத்துணர்ச்சியான படம், இதனை தயாரித்த வெற்றிமாறன் பெரிய வரவேற்புக்கு தகுதியானவர், இப்படம் பெண்களின் போராட்டங்களையும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் புதிய அலை சினிமா பாணியில் தனித்துவமாக சித்தரித்துள்ளது. இயக்குனருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நடிகை அஞ்சலி சிவராமன் இதில் அற்புதமாக நடித்துள்ளார். தவற விடாதீர்கள் என்று பகிர்ந்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் வலை பக்கத்தில், ஒரு பிரமாண பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த குலத்தை இழிவு படுத்துவது போன்றதாகும்.
வெற்றிமாறன் அனுராக் கயாபிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. பிரமாண பெண்ணின் அப்பாவும், அம்மாவும் பழையவர்கள் அல்ல, இந்த காலகட்டத்திற்கு மாறாமல் இருக்கிறார்கள். உங்கள் ஜாதி பெண்களிடம் இதை முயற்சியுங்கள், முதலில் உங்கள் சொந்த குடும்பத்திற்கு அதை வெளிப்படுத்துங்கள் என்று இயக்குனர் ரஞ்சித் பதிவை பகிர்ந்து காட்டமாக விமர்சித்துள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் குவிந்து வருகிறது.