உலக புள்ளியியல் தினம் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அக்டோபர் ஐந்தாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்வில் புள்ளி விவரங்களின் முக்கியத்துவத்தை குறிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. சேவை, தொழில்முறை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் மதிப்புகளின் அடிப்படையில் உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களை நிறைவேற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இறுதியாக உலக புள்ளியியல் தினம் 2020 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி அடுத்ததாக கொண்டாடப்படும்.

உலக புள்ளிகள் தினத்தை முன்னிட்டு புள்ளியியல் மேலாண்மையில் ஒத்துழைக்க நாடுகள் ஒன்றிணைந்து புள்ளி விவரங்களை சேகரிக்கும் செயல்முறைக்கு அதிக முயற்சியை அர்ப்பணிக்கின்றன. மேலும் பல புள்ளியியல் அலுவலகங்கள் மற்றும் சங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் என தனிநபர்கள் முதல் இந்த முக்கியமான நாளை கொண்டாட பல வேடிக்கையான செயல்பாடுகளை செய்து பங்கேற்கின்றனர். புள்ளி விவரங்கள் மற்றும் இந்த நாள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவது 2025 ஆம் ஆண்டின் உலக புள்ளியல் தினத்தை கொண்டாடுவதற்கான சிறந்த வழியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள் நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தினசரி வாழ்வின் புள்ளி விவரங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. தகவல் அறியும் முடிவெடுப்பதில் புள்ளி விவரங்களின் முக்கியத்துவத்தை கொண்டாடுவதற்கும் பிறவற்றுக்கும் உலக புள்ளிகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.