கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நாஷ் பிள்ளை. இவருக்கு ஜோஹன்ஸ் நாஷ் என்ற காதல் கணவரும், 6 வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் காரில் பயணம் செய்த போது விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் உயிர்த்தப்பிய நாஷ் பிள்ளை தனது முழு சுயநினைவையும் இழந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் தனது சுயநினைவு இழந்ததால் தனது காதல் கணவரை கூட இவருக்கு நினைவில்லை. தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காதல் கணவரை டாக்ஸி டிரைவர் என்று நாஷ் பிள்ளை கூறியுள்ளார்.

தொடர்ந்து அவருக்கு நரம்பியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தற்போது சிறிது சிறிதாக குணமடைந்து வருவதால் தனது கணவர் மற்றும் குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காண முடிகிறது எனக் கூறியுள்ளார். நாஷ் பிள்ளைக்கும், ஜோகன்சுக்கும் கடந்தாண்டு தான் திருமணம் நடந்துள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர். தற்போது நாஷ் பிள்ளை இரண்டாவது குழந்தைக்கு தாயாகவும் உள்ளார். இந்த வினோத சம்பவம் இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.