மத்தியப் பிரதேசம், போபாலில், ஒரு இளம் தம்பதிகள், 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக, மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். இதனைத்தொடர்ந்து சமீபத்தில், கணவர் மனைவியை விவாகரத்து மனுவை திரும்ப பெறுமாறு மிரட்டியதோடு , பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கணவரின் செயல்களைப் பற்றி மனைவி போலீசில் புகார் செய்ததையடுத்து, கணவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம்  மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.