இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் வியாபாரி ஒருவர் ஒரு பெண்ணுக்கு காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியாக சில யானை கூட்டங்கள் வருகிறது. மூன்று பெரிய யானைகளும், ஒரு குட்டி யானையும் அந்த வழியாக செல்கிறது. அப்போது இந்த காய்கறிகளை பார்த்த குட்டியானை தள்ளு வண்டியை நோக்கி செல்கிறது.

இதனால் அந்த வண்டியின் உரிமையாளர் பயந்து ஒதுங்குகிறார். அந்த குட்டியானை அதிலிருந்து காய்கறிகளை எடுக்க முயற்சி செய்கிறது. ஆனால் அதனால் முடியவில்லை. இதனால் அங்கிருந்த பெண் ஒருவர் தனது கையில் எடுத்து யானைக்கு கொடுக்கிறார்.

அதனை அந்த யானை அழகாக பிடுங்கிக் கொண்டு வேகமாக தனது தாயுடன் செல்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.