தமிழக முழுவதும் இப்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களின் உயிரும் உடைமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

எனவே பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அது மட்டும் இல்லாமல் சென்னை மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.