தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ முடித்துள்ளார். பின்னர் லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ ஹானர்ஸ் படிப்பை முடித்து  சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இதற்கான பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிகராக சந்திப் கிஷன் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் படம் குறித்த முதல் போஸ்டர் யூடூப்பில் வெளியானது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்தும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே ஜேசன் சஞ்சய் தமிழ் திரையுலகில் முதலில் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படமாகும்.