
18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் எடுத்து 190 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்தார். ஆர் சி பி சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர், குருனால் பாண்டியா தல இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த தோல்வி வருத்தமாக உள்ளது. ஆனால் எங்கள் வீரர்கள் எடுத்துக் கொண்ட வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது.
மேலும் எங்கள் அணியில் உள்ள ஆதரவு ஊழியர்கள் முதல் உரிமையாளர்கள் வரை அனைவரும் சிறப்பானவர்கள். போட்டியை காண வந்து பங்களித்த ஒவ்வொருவருக்கும் நன்றிகள். கடந்த போட்டியை வைத்து பார்க்கும் போது இங்கு 200 ரன்கள் சரியானது தான் என்று நினைத்தேன். அவர்கள் அற்புதமாக பந்து வீசினார்கள் குருனால் பாண்டியா குறிப்பாக சிறப்பாக இருந்தார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை என்று கூறினார்.
எங்கள் இளம் வீரர்கள் ஒவ்வொருவர் குறித்தும் நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் அனைவரும் அச்சமற்ற முறையில் விளையாடினார்கள் நாங்கள் அடுத்த ஆண்டு திருப்பி வந்து சிறப்பாக விளையாடி இந்த கோப்பையை வெல்வோம். எங்களால் மீண்டும் நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும் என்று கூறினார்.