துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் குணமடைந்ததை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கான சேர்ந்து வானில் வண்ண பலூன்களை பறக்க விட்டனர். இஸ்தான்புல்லை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகன் ரத்த புற்றுநோயிலிருந்து குணமடைந்ததை கொண்டாடும் விதமாக வானில் பலூன்களை பறக்க விட்டு கொண்டாடியுள்ளார். ஆனால் தங்களுக்கு யாரும் இல்லை என்றும் அதில் இணைய விரும்புவார்கள் வரலாம் என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

அவரது இந்த பதிவுகள் துருக்கி முழுவதும் வைரலான நிலையில் அந்த சிறுவனுக்காக  இஸ்தான்புலில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இது அந்த நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. புற்றுநோய்யால் பாதித்து குணமடைந்த சிறுவனின் தந்தை வார்த்தைக்காக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வானில் வண்ண பலன்களை பறக்கவிட்ட நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. இந்நிகழ்வில் புற்றுநோயில் பாதிக்கப்பட்ட பலரும் பங்கேற்றனர்.