சமீபத்தில் நடந்து முடிந்த 18 வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் பணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத பல வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக 14 வயதான வைபவ் சூர்யவன்சி சதம் அடித்து வரலாறு படைத்துள்ளார். மேலும் பஞ்சாப் அணியின் பிரம்சிம்ரன் சிங் பிரியன்ஷ் ஆர்யா, சென்னை அணியில் ஆயுஷ் மாத்ரே என பலர் உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் மூவரும் எதிர்பவரும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்று முன்னாள் வீரர் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பிரியன்ஷ் ஆர்யா, ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்சி ஆகிய அனைவரும் நிச்சயமாக உலகக் கோப்பை இறுதி இடத்திற்கான போட்டியில் இருப்பார்கள். உங்களிடம் ஏற்கனவே சுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் டி20 போட்டிகளிலும் அசத்தக்கூடிய டெஸ்ட் வீரர்கள். இதைத்தொடர்ந்து சஞ்சு சாம்சன் இருக்கிறார். எனவே யாரிடம் பெறுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருக்கும். இதில் உடற்பகுதி முக்கிய பங்கு வகிக்கும். உலகக்கோப்பைக்கு செல்லும்போது முழுமையாக உடற் தகுதி உள்ள அணியை நீங்கள் விரும்புவீர்கள். மேலும் தேர்வாளர்களும், நிர்வாகமும் அதை உன்னிப்பாக கவனிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.