
கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை, திமுக தான் இந்த நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சம்பவங்கள் நடக்காத நாளே இல்லை. இது குறித்து தினசரி செய்திகள் வந்து கொண்டு உள்ளன.
ஸ்டாலின் மாடல் ஆட்சி தான் துரோக ஆட்சி முதல்வர் வரும்போது அவருக்கு பிடிக்காமல் தான் கழிவு நீர் கால்வாயை திரை போட்டு மறைக்கிறார்கள். மோசமான ஆட்சிக்கு இதுவே சாட்சி என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது தேமுதிக எங்களுடைய சுமூக உறவில் உள்ளது. எதையாவது சொல்லி பிரேக் பண்ண நினைக்காதீங்க. அது ஒருபோதும் நடக்காது என்று தெரிவித்தார்.