
ஜார்க்கண்டில் 2-ம் கட்ட தேர்தல் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி ஜார்கண்ட் சென்றிருந்தார். அவருடைய ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தியும் ஜார்கண்டில் இருந்தார். இதனால் பிரதமர் மோடி இருக்கும் வான் பகுதியில் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ராகுல் காந்தி 2 மணி நேரம் காத்திருந்தார்.
இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பிரதமர் மோடி நேற்று அவருடைய விமானத்தில் இருந்து கொண்டிருக்கும்போதே, வேண்டுமென்றே ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் 2 மணி நேரம் காத்திருந்தது.
இன்று அமித்ஷா ஜார்கண்ட் வந்ததால் என்னுடைய ஹெலிகாப்டர் 2 மணி நேரம் தாமதமானது. அவர் செல்லக்கூடிய வழி வேறு, நான் செல்லக் கூடிய வழி வேறு. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் மந்திரிகளுக்கு இணையான ரேங்க் கொண்டவர், நானும் அப்படித்தான். ஆனால் விமான நிலையத்தில் ஒதுக்கப்பட்ட ஓய்வறை பிரதமர் மோடிக்காக என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் மோடிக்காக கழிவறை கூட ஒதுக்க முடியுமா என்று நான் என்று கேள்வி கேட்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.