
அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். அதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் முடிவையும் எடுத்தார். இந்த முடிவை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸில் சான்பிரான்சிஸ்கோ பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் அதன் பின் கலவரமாக வெடித்தது.
கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் கடைகள், வாகனங்கள், வணிக நிறுவனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் கலவரத்தை முன்னிருந்து நடத்திய நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த 2000 பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.