18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் எடுத்து 190 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்தார். ஆர் சி பி சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர், குருனால் பாண்டியா தல இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் RCB அணி வெற்றி பெற்றது.

அதன் பின் நட்சத்திர வீரர் விராட் கோலி பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது இந்த வெற்றியானது அணிக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பொருந்தும். 18 ஆண்டுகள் ஆகியுள்ளது என்னுடைய இளமையை முதல் தர விளையாட்டை நான் கொடுத்திருக்கிறேன். என்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறேன். இந்த நாள் வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. கடைசி பந்து வீசப்பட்டதும் நான் உணர்ச்சிவசப்பட்டேன்.

டி வில்லியர்ஸ் இந்த அணிக்காக செய்த விஷயங்கள் பெரியவை. அவரிடம் போட்டி தொடங்குவதற்கு முன்பே இதனை நான் கூறினேன். இந்த வெற்றி எங்களுக்கானது என்பது போல் உங்களுக்கானது. எங்களுடன் அவர் இன்றிரவு கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் பெங்களூரு அனிக்காக அவர் செய்த விஷயங்கள் மிகச் சிறந்தவை. எங்களுக்காக நிறைய ஆட்டநாயகன் விருதுகளை அவர் பெற்றுத் தந்திருக்கிறார்.

அவர் ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும் இந்த அணிக்கு ஒரு நபராக எனக்கு எங்களுடைய நட்புறவு மற்றும் பெங்களூர் மக்கள் மீது அவர் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவை என்னால் வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. அதனால் எங்களுடன் மேடையில் நிற்க அவர் தகுதியானவர். எங்கள் அனைவருடனும் ஒன்றாக இன்று இரவு இந்த கோப்பையை உயர்த்திப் பிடிக்க தகுதியானவர் அவர் என்று கூறினார்.