ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கர்வா மாவட்டத்தில் பஹோகுந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் புத்தநாத் சிங் (36). இவருக்கு கடந்த 36 நாட்களுக்கு முன்பு சுனிதா (22) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது.

இந்நிலையில் சுனிதா திருமணமான 36 வது நாளில் தனது கணவர் புத்தநாத் சிங்கின் உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து புத்தநாத்தின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் சுனிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் சுனிதா நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்த கொலைச் சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணையில், புத்த நாத்திற்கும், சுனிதாவிற்கும் இடையே திருமணம் ஆன அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து பிரச்சினைகள் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் சுனிதா திருமணத்திற்கு முன்பு புத்தநாத்தை பிடிக்கவில்லை என்றும், அவருடன் வாழ முடியாது என்றும் தனது வீட்டாரிடம் கூறியுள்ளார். இருப்பினும் எந்த பிரச்சனையும் இல்லாதது போல் சுனிதாவை அவரது குடும்பத்தினர் புத்தநாத்தின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.