சமீபத்தில் 18 வது ஐ பி எல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி RCB அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் அறிமுகமான கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் ஆர் சி பி அணி முதல் 17 ஆண்டுகள் வெற்றி பெறவில்லை. ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. இதனால் அந்த அணி பல விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே தான் இருந்தார்கள்.

இந்நிலையில் இந்த அணியின் 18 ஆண்டுகால ஏக்கம் இந்த சீசனோடு தணிந்தது. ஐபிஎல் வரலாற்றில் முதல் கோப்பையை ஆர்சிபி அணி வென்றுள்ளது. இந்த வெற்றி அணியின் வீரர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களும் கொண்டாடினர். இருப்பினும் ஆர் சி பி அணியின் வெற்றியை கொண்டாட பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவில் பங்கேற்ற ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் ஆர் சி பி அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ஆர் சி பி அணியை விற்க அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் வெற்றி பிராண்ட் மதிப்பு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த அணியின் உரிமையாளரான டயாஜியோ பி எல் சி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் உரிமையை விற்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டயாஜியோ நிறுவனம் ஆர் சி பி அணியின் முழு அல்லது பகுதி உரிமையை விற்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு 2 பில்லியன் டாலர் அதாவது இந்தியன் மதிப்பில் 16,834 கோடி மதிப்பீட்டை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.