கேரள மாநிலம், வடக்கு பரவூர் பகுதியில் வசிக்கும் சந்தியா மற்றும் அவரது குடும்பம் 2019-ஆம் ஆண்டில், தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து 4 லட்சம் ரூபாய் கடன் எடுத்து, லைஃப் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீட்டின் கட்டுமானப் பணிகளை முடிக்க முற்பட்டனர். கடந்த2  ஆண்டுகளுக்கு முன்பு கணவர் கைவிட்டதால், சந்தியாவால் கடன் தவணைகளை செலுத்த முடியாமல் போனது.

இந்நிலையில் சந்தியா வீட்டில் இல்லாதபோது நிதி நிறுவனம் வீட்டு சாவியை ஜப்தி செய்தது. இதனால் சந்தியாவால்  உள்ளிருந்த பொருட்களையும் எடுக்க முடியவில்லை. சந்தியா மற்றும் அவரது குழந்தைகள் ஜப்தி செய்யப்பட்ட வீட்டின் முன் தவித்த நிலையில், இந்த விஷயம் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் தலையீட்டின் பின்னர், மணப்புரம் நிதி நிறுவனம் சந்தியாவிடம் வீட்டு சாவியை மீண்டும் திருப்பிக் கொடுத்தது.

இந்த நெகிழ்ச்சி தருணத்தில், வீட்டிற்கு திரும்பிய சந்தியா மற்றும் அவரது குழந்தைகள் மிகுந்த நிம்மதி அடைந்தனர். முக்கியமாக, லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ. யூசுப் அலி, இந்த குடும்பத்தின் நெருக்கடியை கண்டு, அவர்களுக்கு உதவ முனைந்தார். 8 லட்சம் ரூபாய் வங்கிக் கடனை அவரே செலுத்தினார். இது மட்டுமின்றி, 10 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையையும் வழங்கியதால், சந்தியாவின் வாழ்க்கையில் ஒரு புதிய உத்வேகம் ஏற்பட்டது.