
தென் அமெரிக்காவில் கொலம்பியா என்ற நாடு அமைந்துள்ளது. அங்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் எதிர்கட்சியான பழமைவாத ஜனநாயக மையம் கட்சியில் உள்ள எம்பி மிகுல் உர்பெல் டர்பே(39) அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் தலைநகர் பொகொடாவில் நேற்று பிரச்சாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் மிகுல் கலந்து கொண்டார். அப்போது திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
Urgente
Aquí está el momento del atentado al Dr Miguel Uribe
Que dolor de Patria
Gobierno miserable !Imágenes sensibles pic.twitter.com/tA3VWGap5V
— Luis Aníbal Rincón Arguello. ®
(@Rincon001A) June 7, 2025
இதில் அவரது முதுகு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் மிகுலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.