விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முன்னிட்டு, விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநாட்டின் வெற்றிக்காகவும், பொதுமக்களின் ஆதரவைப் பெறும் விதமாகவும் 1 ரூபாய்க்கு தேநீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திக்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேநீர் அருந்தினர். ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் சுவையான தேநீரை அருந்தி மகிழ்ந்தனர் பொதுமக்கள்.