
மேற்கு ஜெர்மனியில் ஒரு பீட்சா கடை உள்ளது. அந்த பீட்சா கடையில் “நம்பர் 40” என்று குறிப்பிட்ட பீட்சாவை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் ரகசியமாக கடையை கண்காணித்தனர். அப்போது பீட்சாவிற்கு சைடு டிஷ்ஷாக கொக்கைன் என்னும் போதை பொருளும் வழங்கப்பட்டது. இதற்காகத் தான் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அந்த பீட்சாவை வாங்குவதற்காக குவிந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் கடையின் மேலாளரை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த 2 லட்சத்து 68 ஆயிரம் யூரோ ரொக்கத்தையும், 1.6 கிலோ கொக்கைன் மற்றும் 400 கிராம் கஞ்சா பொருட்களையும் கைப்பற்றின. இதுகுறித்து காவல்துறையினர் மேலாளரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின் அவர் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கண்காணித்த காவல்துறையினர் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்துள்ளது.