இரவு நேரத்தில் 10 மணி அளவில் அதற்கு மேல் மொபைல் பார்த்துவிட்டு பகலில் தூங்கினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அயுட்க்காலம் குறையும் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒரு நாளில் 6 மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தை செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் கழிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு முன்பு அன்றைய தினம் செல்போனில் வந்து குவிந்துள்ள whatsapp செய்திகளையும் வீடியோக்களையும் பார்க்க, மெசேஜ்களுக்கு பதில் அளிக்க நீண்ட நேரத்தை செலவு செய்கிறார்கள் என்று அறிக்கைகள் கூறுகிறது.

அதில் நீல நிற கதிர்களின் தாக்குதலால் செல்போன் பயன்படுத்துபவர்கள் உடலில் மெலடோனின் சுரப்பது குறைய தொடங்குவதாக கூறப்படுகிறது. அதன் விளைவாக அவர்கள் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் நீண்ட நேரம் அவதி அடைய நேரிடுகிறது. செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒலி கதிர்களும் மெலடோனின் சுரப்பது பாதிக்க காரணியாக இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீலநிற ஒளி நிறைந்த அறையில் அதிக நேரம் செலவழிப்பது ஆழ்ந்த உறக்கத்திற்கு தடையாக அமைந்து விடுகிறது.

சரியாக தூங்காமல் செல்போன் பயன்படுத்துகிறீர்கள் அல்லது வேலை செய்கிறீர்கள் என்றால் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரும் என்றும் கூறுகின்றனர். இரவு நேரத்தில் அதிக நேரம் செல்போன் பார்த்துவிட்டு பகல் நேரங்களில் அதிகம் தூங்கினால் அது சரியான தூக்கமாக உடல் ஏற்று கொள்ளாது. தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால் உடலில் பல பிரச்சனைகள் வரும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆயுட்காலம் குறையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.