பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

காமெடியனாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவ்வப்போது சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்தித்து பேசுவார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனது குடும்பத்துடன் சிவகார்த்திகேயனை சந்தித்துள்ளார். அந்த ரசிகரின் கோரிக்கையை ஏற்று சிவகார்த்திகேயன் அவரது குழந்தைக்கு பெயர் சூட்டினார். அந்த குழந்தைக்கு பெற்றோர் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்தார்.

நைனிதாகிருஷ்ணன் என்ற பெயரை சிவகார்த்திகேயன் குழந்தையின் காதில் மூன்று முறை கூறி குழந்தைக்கு முத்தம் கொடுத்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த சிலர் ஏதோ ஒரு தோட்டத்தில் ரசிகரை நிறுத்தி சிவகார்த்திகேயன் பெயர் சூட்டுகிறார். சூட்டிங் ஸ்பாட்தாக இருந்தாலும் சிவகார்த்திகேயன் கேரவனில் அவர்களை அமர வைத்து பேசியிருக்கலாமே என கமெண்ட் செய்து வருகின்றனர்.