
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வரலாறு காணாத கனமழை ஏற்பட்டுள்ளதால் நாட்டு மக்களின் வாழ்க்கை தலைகீழாக மாறி உள்ளது. தொடர்ந்து நிலவும் காலநிலை மாற்றங்களால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்நாட்டில் கனமழை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 500க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது உள்ளூர் நிர்வாகம் மீட்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.