தமிழகத்தில் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மயோனைஸ்  தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உருவாக்குவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தமிழக அரசு ஓராண்டு தடை விதித்திருந்தது.

இந்நிலையில் தடையை மீறி ஒரு சில உணவகங்களில் மயோனைஸ் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதனால் தமிழக உணவு பாதுகாப்புத் துறை சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட உள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள உணவகங்களில் மயோனைஸ் பயன்படுத்துவதை கண்டறிந்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.