பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நீதிபதியாக நிர்மல் யாதவ் மற்றும் நிர்மல் ஜித் கபூர் என்ற நீதிபதிகள் பணியாற்றினர். கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நிர்மல் ஜித் கவுரின் வீட்டின் முன்பாக ரூபாய் 15 லட்சம் மதிப்பில் பணக்கட்டுகள் இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் ரூ. 15 லட்சம் நிர்மல் ஜித் கவுர் பணி புரியும் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் நிர்மல் யாதவ் என்பவருக்கு சொத்து விவகாரம் ஒன்றை சுலபமாக முடிப்பதற்காக கொடுக்கப்பட்ட பணம் தான் என்பது தெரிய வந்தது. அதோடு இரு நீதிபதிகளின் பெயரும் ஒரே போல இருப்பதால் யாரென்று தெரியாமல் பணத்தை நீதிபதி நிர்மல் ஜித் கவுர் வீட்டில் வைத்து விட்டதாக பணத்தை வைத்த நபர் கூறினார். ஆனால் அதற்கு நீதிபதி நிர்மல் யாதவ் மறுப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நிர்மல் யாதவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட இந்த வழக்கு 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது. மேலும் அதன்படி நீதிபதி நிர்மல் யாதவ் அந்த குற்றத்தை செய்தார் என்பதற்காக ஆதாரம் கிடைக்காததால் அவரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.