
நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த மே 27ஆம் தேதி கடைசி லீக் போட்டி நடைபெற்றது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றியை பெற்றது. அதனால் புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தை பெற்றது. தற்போது குவாலிபயர் 1 போட்டியில் விளையாடுவதற்கு ஆர்.சி.பி அணி தயாராகி வருகிறது.
அந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய லக்னோ அணி 228 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் சதத்தை அடித்து 61 ரன்கள் குவித்தார். இந்த வருடம் முதல் முறையாக ரிஷப்பண்ட் சதம் அடித்ததால் குட்டிக்கரணம் அடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆனால் அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. ஏனெனில் அடுத்ததாக களம் இறங்கிய பெங்களூர் அணி, லக்னோ அணியினரை 18.4 ஓவரிலேயே 230 ரன்கள் அடித்து எளிதாக வென்றனர். மேலும் அந்தப் போட்டியில் லக்னோ அணியினர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்கவில்லை.
அதனால் பிசிசிஐ இது 3ஆவது முறை என்பதால் லக்னோ அணியின் அனைத்து வீரர்களுக்கும் தலா 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அதாவது இந்த ஆண்டு ரிஷப் பண்ட் தலைமையில் 3ஆவது முறையாக லக்னோ அணியினர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்கவில்லை.
அதற்காக ஏற்கனவே 12.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிஷப் பண்டுக்கு 30 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் இந்த வருடம் மோசமாக விளையாடிய நிலையில் தற்போது கடைசி போட்டியில் சதம் அடித்த மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றதாலும் ,ரூபாய் 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாலும் அவரது மகிழ்ச்சி கொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை.