18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் எடுத்து 190 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்தார். ஆர் சி பி சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர், குருனால் பாண்டியா தல இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

அந்த அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் போட்டி முடிந்ததும் அணியின் நட்சத்திர வீரராக விராத் கோலி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, என்ன விஷயம் நடந்த போதும் இந்த அணிக்கு நான் விசுவாசத்துடன் இருந்திருக்கிறேன். வேறு விதத்தில் நினைத்த தருணங்களும் உண்டு.

ஆனால் இந்த அணியிலேயே விளையாடினேன். பெங்களூர் அணி உடனே என்னுடைய மனம் ஆன்மா இருக்கும் நான் ஐபிஎல்-ல் விளையாடும் வரை இந்த அணியிலேயே தான் இருப்பேன். இன்று இரவு ஒரு குழந்தையைப் போல உறங்குவேன் என்று நேற்று வெற்றி பெற்ற பிறகு கூறினார். கடைசியாக என்னுடைய மடியில் இந்த வெற்றியை தந்த கடவுளுக்கு நன்றி. இந்த நிர்வாகம் மற்றும் அணியானது நேர்மையில் சிறந்து விளங்கியது என்று கூறியுள்ளார்.