உத்திரபிரதேச மாநிலம் அம்ரோகோ மாவட்டத்தில் நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் ராமன் மற்றும் ராவணனாக நடித்த 2 நடிகர்களும் உண்மையிலேயே சண்டையிட்டுக் கொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம் லீலா நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே போர் தொடங்கியது. அப்போது இருவரும் அம்புகளை விட்டு சண்டையிட தொடங்கினர். அந்த சமயத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் ராவணனாக நடித்த நபர் திடீரென்று கோபமடைந்து ராமனை தள்ளி விடுகின்றார். இதனால் மேலும் கோபமடைந்த ராமன் ராவணனை தாக்க வருகின்றார். அப்போது ராமனை கீழே தள்ளி ராவணன் அவரை அடிக்க தொடங்குகின்றார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்த முயற்சித்த போதும் முடியவில்லை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.