பிரபல நடிகையான ராதிகா சரத்குமார் கேரவன்களில் ரகசிய கேமராக்கள் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும் கேரளாவை சேர்ந்த ஒரு நடிகை அதைப்பற்றி தன்னிடம் கூறியதாகவும் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ராதிகாவை நேரடியாக புலனாய்வு துறை அதிகாரிகள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் எப்போது நடந்தது? எந்த நடிகை சொன்னார் என்பதை கேட்டறிந்தனர். அவர்களிடம் ராதிகா சரத்குமார் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இந்த நிலையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சம்பவம் எப்போது நடந்தது? இனிவரும் காலங்களில் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது? ரகசிய கேமராக்கள் இருப்பது எப்படி தடுப்பது என கேட்டுக்கொண்டனர். சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இதுபோல தவறாக நடத்துகிறார்களா என்பதையும் விசாரிக்கின்றனர் எல்லா கேரவன்களிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்படி கேமராக்கள் இருந்தால் அதை கண்டறிவதற்கு புதிய தொழில்நுட்பங்கள் எல்லாம் இருக்கிறது. அதனையும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளனர்.