தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அமைச்சர் கூறியதாவது, தனியார் பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அட்டவணை கொடுத்து விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விதிகளை மீறி கூடுதலாக கட்டணங்களை வசூலிக்கும் பள்ளிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.