
துணை நடிகையும், பிரபல சின்னத்திரை நடிகையுமான நேபாள நாட்டை சேர்ந்த ஷர்மிளா தாப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011 முதல் கடந்த 2021 வரை 10 ஆண்டுகள் சென்னை அண்ணாநகர் முகவரி ஆவணம் கொடுத்து இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருந்தார்.
தற்போது அந்த பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் மீண்டும் வியாசர்பாடி முகவரி கொடுத்து விண்ணப்பித்துள்ளார். இதில் முறைகேடு இருப்பதால் நடிகை தாப்பா மீது உள்துறை அமைச்சகம் கீழ் செயல்படும் வெளி நாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.