
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பார்க்கிங் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் தற்போது அது மோதலாய் மாறி உள்ளது.
இந்நிலையில் சம்பவ நாளன்று பக்கத்து வீட்டுக்காரர் அவரது காரை வீட்டின் முன்பு நிறுத்தாமல் அருகில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர்கள் பலமுறை கூறிவந்த நிலையில் தற்போது கோவமடைந்த அவர்கள் கிரிக்கெட் பேட் மற்றும் தடியுடன் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒருவரின் கார் சேதமாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்ததுடன் அவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
Kalesh b/w Two parties over car parking in Sector 72’s B Block in Noida’s Sector 113 police station area, there was a lot of ruckus on the road, the car was broken with a cricket bat, Noida UP
pic.twitter.com/ysMagNpWuW— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 26, 2024
“>