
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அது சுற்று பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும். அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் உலகத்தில் வருகிற 15-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
நாகப்பட்டினம், திருவள்ளூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.