
கர்நாடக மாநிலம் கலபுரகி கிராமத்தில் அண்ணன் காதலித்த குடும்பத்தால் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலபுரகி கிராமத்தை சேர்ந்த உள்ள 23 வயதான சச்சின் மற்றும் அவரது 19 வயது தம்பி சுமித் மல்லாபாத் குடும்பத்துடன் வசித்து வந்தனர். சுமித் மும்பையில் கல்லூரியில் படித்து வந்தார். சச்சின், அருகே நாகனஹள்ளி கிராமத்தில் உள்ள இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிராக இருந்ததால், சச்சினை பலமுறை எச்சரித்து உள்ளனர்.
சம்பவ நாளன்று சுமித், தங்கையுடன் திருவிழாவில் கலந்து கொண்டு வீட்டுக்கு வந்த போது, சச்சினின் காதலியின் குடும்பத்தினர் வீட்டில் புகுந்து, சுமித் மற்றும் அவரது தாயுடன் தகராறு செய்தனர். இதற்கிடையில், தகராறு முற்றிய நிலையில் சச்சின் காதலியின் உறவினர்கள் சுமிதை தாக்கியதுடன் கத்தியால் குத்தி உள்ளனர். இதனால் சுமித் உயிருக்கு போராடிய நிலையில், கலபுரகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் சுமித் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் காதலித்ததால் தம்பி கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.