
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்றது. நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.சி.பி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு பிசிசிஐ 20 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கியுள்ளது. மேலும் இறுதிப் போட்டியில் ரன்னர் அப் அணிக்கு 12.5 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று குவாலிபயர் 2 வரை வந்து தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 7 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது. எலிமினேட்டர் போட்டி வரை வந்து 4ஆவது இடத்தை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 6.50 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தொடர் ஆட்டநாயகன் விருதை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யா குமார் யாதவுக்கு ரூபாய் 15 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
அதோடு அதிக விக்கெட் எடுத்த பிரசித் கிருஷ்ணா ஊதா தொப்பியுடன் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை பெற்றார். அதனை அடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்ற சாய் சுதர்சன் ரூபாய் 10 லட்சம் பரிசு வென்றார்.
மேலும் அதிக பவுண்டரி, அதிக ஃபேண்டஸி புள்ளிகள் பெற்றதற்காக சாய் சுதர்சன் தலா 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை பெற்றார். மேலும் அதிக ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடிய வைபோவ் சூர்யவன்சி ரூபாய் 10 லட்சம் பரிசு தொகையை பெற்றார்.
அதிக டாட் பால்களை வீசிய குஜராத் அணியின் முகமது சிராஜ் ரூபாய் 10 லட்சம் பரிசு தொகையை பெற்றார். இதனை அடுத்து அதிக சிக்ஸர்கள் அடித்த லக்னோவின் நிக்கோலஸ் பூரான் ரூபாய் 10 லட்சம் பரிசு தொகை வென்றார்.
இதனைத் தொடர்ந்து நேர்மையுடன் விளையாடியதற்காக ஃபேர்ப்ளே விருதை வென்ற சிஎஸ்கே அணிக்கு ரூபாய் 10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதன் பின் இந்த ஆண்டிற்கான சிறந்த மைதானமாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி ரூபாய் 50 லட்சம் ஸ்பெஷல் பரிசை வென்றது.