மகாராஷ்டிரா மாநில மருத்துவ கவுன்சில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன மருத்துவ பயிற்சி பெறுவதற்காக மாநில மருத்துவக் கல்வி மற்றும் மருந்துகள் துறை அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தது.

அதன்படி ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்துவ படிப்பை படித்தால் நவீன மருந்தியல் சான்றிதழ் அளிக்கப்பட்டு, அவர்களும் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதாவது மகாராஷ்டிரா அரசியல் தலைவர்கள் பல ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகிறார்கள்.

எனவே அவர்கள் லாபம் பார்ப்பதற்காக தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இதனால் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என இந்திய மருத்துவர்கள் சங்கத் தலைவர் சந்தோஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.