
மீரட் மாவட்டத்தின் தௌரலா பகுதியில் உள்ள சமௌலி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வியக்கத்தக்க மற்றும் பயமுறுத்தும் சம்பவம் நடந்தது. விவசாயி மஹ்பூஸின் வீட்டில் இருந்த அடைப்புப் பகுதியிலிருந்து திடீரென பாம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்ததால், முழுக் கிராமத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள ஒரு பாம்பைக் கண்ட மஹ்பூஸ் அதை கொன்றார். ஆனால் பின்னர் பாம்புகள்தொடர்சியாக வந்ததை பார்த்த அவர், தனது குடும்பத்துடன் சேர்ந்து பாம்புகளை கொன்று ஒரு குழியில் புதைத்தார்.
சம்பவம் நடைபெற ஆரம்பித்ததும், கிராம மக்கள் மஹ்பூஸின் வீட்டை நோக்கி ஓடினர். கிராமத்தின் சாய்வுப் பாதையின் அடியில் இருந்து இந்த பாம்புகள் வெளியே வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மொத்தம் 52 பாம்புகள் கொல்லப்பட்டு, மண்ணில் புதைக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் மக்கள் மிகுந்த பயத்தில் இருந்தனர். இருப்பினும், ஒன்று சேர்ந்து துணிச்சலுடன் அந்த பாம்புகளைத் தாக்கி சாய்த்தனர்.
இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக கிராம மக்கள் கூறினாலும், வனத்துறை அதிகாரிகள் எந்த தகவலும் வரவில்லை என்றும், எந்தக் குழுவும் சம்பவ இடத்திற்குச் செல்லவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர். சாய்வுப் பாதையின் அடியில் பாம்புகள் முட்டையிட்டதால் இவ்வளவு எண்ணிக்கையில் வெளியே வந்திருக்கலாம் என்று கிராம மக்கள் நம்புகின்றனர். இதனால், அங்கு வசிக்கும் குடும்பம் முழுவதும் இரவு முழுக்க விழித்திருந்து காவல் காத்ததாகவும் கூறப்படுகிறது.