
ஹரியானாவில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி என்ன பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஹரியானாவில் ஏழு முக்கிய வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவித்துள்ளது. இந்த வாக்குறுதிகளை சட்டப்பேரவையில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன் கார்கே இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவு வழங்கப்படும் என்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கிரிமி லேயர் வருமான வரம்பே 6 லட்சத்திலிருந்து 10 லட்சத்திற்கு உயர்த்தப்படும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியவர் ஊனமுற்றவர் மற்றும் விதவைகளுக்கு ஓய்வூதியமாக ரூபாய் 6000 வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். வீடுகளுக்கு 300 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும். 25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அறிமுகப்படுத்திய நிலையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தேசிய அளவில் கவனத்தை பெற்றதை போன்று தற்போது காஷ்மீரில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்ததை தொடர்ந்து அதே வகையில் ஹரியானாவில் மகளிர்க்கும் மாதம் 3000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் 2 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறி உள்ளனர்.