
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னதம்பி, ராசாத்தி என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தவர் பாவனி. இதையடுத்து கடந்த 2021-ஆம் வருடம் பிக்பாஸ் 5-வது சீசனில் பங்கேற்று மக்களின் ஆதரவை பெற்றார். அந்த நிகழ்ச்சியின் வாயிலாக பாவனிக்கு அமீர் அறிமுகமானார். அதன்பின் பாவனி நிகழ்ச்சி முடித்து வெளியில் வந்த பிறகு அமீரை காதலிப்பதாக சொல்லி இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர்.
இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு திரைப்படத்தில் கூட நடித்திருந்தனர். சமீபத்தில் பாவனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் உங்களுக்கும், அமீருக்கும் திருமணம் முடிந்ததை ஏன் சொல்லவில்லை என கேட்டுள்ளார். அதற்கு பாவனி, சென்ற மாதம் நான் கர்ப்பமாக உள்ளதாக நீங்களே முடிவு செய்தீர்கள். இப்போது ரகசியமாக திருமணத்தை கூறினார்கள் என்று சொல்கிறார்கள். அடுத்தது என்ன கூற போகிறீர்கள்?… என்று பாவனி கூறியுள்ளார்.
