
டெல்லியில் மருத்துவமனையில் MRI ஸ்கேன் எடுப்பதற்கு காத்திருப்பு காலம் மூன்று ஆண்டுகளாக இருப்பதால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஜெய்தீப் தே (52) என்பவர் காலில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்றார். அவருக்கு MRI ஸ்கேன் எடுக்க 2027-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி வருவதற்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க 18,000 ரூபாய் வரை செலவாகும் என்பதால் ஜெய்தீப் ஸ்கேன் எடுக்கும் முடிவையே கைவிட்டார்.